Saturday 25 May 2019

சனி பகவானுடன் ஓர் கலந்துரையாடல்: பகுதி : 1


சனி பகவானுடன் ஓர் கலந்துரையாடல்:
பகுதி : 1
ஜாதகர்: வணங்குகிறேன் சனி பகவனே .
சனி : மற்றவர்கள் தான் அறியாமையால் என்னை வணங்குகிறார்கள். நீயுமா என்னை வணங்குகிறாய் ? அதுவும் என் முன் நின்று ?
ஜாதகர் : தாங்கள் தான் எனது லக்கினாதிபதி ஆயிற்றே . வணங்கினால் என்ன தவறு ?
சனி : நான் லக்கினாதிபதி ஆனாலும் என்னுடைய பார்வை உமக்கு நன்மை செய்யயாது . நான் முழுமையான பாவ கிரகம் . நான் பார்க்கும் இடங்கள் நலிவடையும் . இது தெரியாமல் சிலர் கோவிலில் என் சிலை முன் நின்று பிரார்த்தினை செய்கிறார்கள் .
ஜாதகர் : உங்களை வணங்க கூடாதா?
சனி : என்னை வணங்குபவர்களுக்கு கொடுக்க என்னிடம் என்ன உள்ளது . நோய் , கடன் , எதிரியை தவிர ....
ஜாதகர் : அப்படியெனில் உங்கள் மனதை குளிர்விக்க நாங்கள் யாரை வணங்க வேண்டும்?
சனி : என்னை வணங்குவதை நிறுத்திவிட்டு என் குருவான கால பைரவரை வணங்கலாம் . என்னை நேரடியாக வணங்கினால் கடன் , நோய் , துக்கம் , துயரம் போன்றவை மட்டுமே கிடைக்கும் .
ஜாதகர் : உங்களை கண்டால் அனைவரும் நடுங்குகிறார்களே. இதற்கு என்ன காரணம் ?
சனி : நவ கிரகங்களில் நானே முழுமையான பாவ கிரகம். கால புருஷனின் கர்மஸ்தானம் என்னுடைய வீடு. இதிலிருந்தே நான் கர்மாதிபதி என்பதை நீ அறியலாம் . நீதி தவறாமல் நடு நிலையோடு அவரவர் செய்த முன்ஜென்ம கர்மவினைகேற்றவாரு நான் தகுந்த தண்டனை கொடுப்பேன் .
ஜாதகர் : உங்களை “மந்தன்” என்று அழைக்கிறார்களே? இதற்கு என்ன காரணம் ?
சனி : நவ கிரகங்களில் ராசி மண்டலத்தை மெதுவாக கடப்பவன் நான் மட்டுமே . ஒரு ராசியல் சுமார் இரண்டு அரை ஆண்டு  காலம் தங்குவேன். நான் விரைவாக ராசி மண்டலத்தை கடந்தால் மக்களின் நிலைமை என்ன ஆகும் ?  ஆகவே நான் மெதுவாக நகர்கிறேன் . எனவே என்னை மந்தன் என்று அலைகிறார்கள் .
ஜாதகர் : உங்கள் லக்கினமான மகர மற்றும் கும்பத்தில் ஜனித்தவர்கள் மந்த புத்தியோடு இருப்பார்களா?
சனி : மகரம் என்னுடைய சர வீடு . இந்த லக்கினத்தில் ஜனித்தவர்கள் பொதுவாகவே வேகமுடன் செயல்படுவார்கள் . கும்பம் என்னுடைய ஸ்திர வீடு . இந்த லக்கினத்தில் இருப்பவர்கள் பொதுவாக மிகவும் நிதானமாக செயல் படுவார்கள் . நான் சுபதுவம் இன்றி லக்கினத்தை தொடர்பு கொள்ளும்போது ஒருவர் மந்த புத்தியோடு இருப்பார்.
ஜாதகர் : முழு பாவ கிரகமான நீங்கள் நன்மை செய்வீர்களா?
சனி : நான் “சுபத்துவம்” மற்றும் “சூட்சம வலு” அடையும்போது மட்டும் நன்மை செய்வேன் .
ஜாதகர் : நீங்கள் எப்பொழுது “சூட்சம வலு” அடைவீர்கள் ?
சனி : நான் ஞான காரகனான கேதுவுடன் ராசியிலோ , அல்லது அம்சத்திலோ இணையும்பொழுது “சூட்சம வலு” அடைவேன் .

கலந்துரையாடல் தொடரும் ......



No comments:

Post a Comment