கிரகங்களின் வேகம் -ஓர்
பார்வை
கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ராசி
மண்டலத்தில் பயணம் செய்வதை அனைவரும் அறிந்ததே . சர்ப்ப கிரகங்கள் எப்போதும்
பின்னோக்கியே நகரும் . சூரியனும் , சந்திரனும் , ஒரே சீரான வேகத்தில் ஓய்வொரு
ராசியையும் கடந்து வருவார்கள் . பஞ்ச பூத கிரகங்களான குரு, சுக்கிரன், புதன் ,
செவ்வாய் , சனி போன்றவை எப்போதும் ஒரே சீராக பயணம் செய்வதில்லை . சில நேரங்களில்
வேகமாகவும் , சில நேரங்களில் மெதுவாகவும் , சில நேரங்களில் பின்னோக்கியும் பயணம்
செய்யும் . கிரகங்களின் பயணத்தை அதன் வேகத்தை அடிப்படையாக கொண்டு பராசரர் அவர்கள் எட்டு பிரிவுகளாக பிரித்துள்ளார் . அவை
1. வக்கிரம்
2. அனுவக்கிரம்
3. ஸ்தம்பனம்
4. மந்த
5. மந்ததார
6. சம
7. சார
8. அதிசார ஆகும் .
கிரகத்தின் வலிமையை
கணக்கிட பயன்படும் ஷட் பலங்களில் ஒன்றான “சேஷ்ட பலம்” என்பது கிரகத்தின் வேகத்தை
அடிபடையாக கொண்டது.
1.வக்கிரம்- வக்கிரம் என்பது
பின்னோக்கிய நகர்வு ஆகும் .இது அனைவரும் அறிந்ததே. இவ்வாறு வக்கிரம் அடைந்த
கிரகங்கள் ஷட் பலத்தில் ஒன்றான சேஷ்ட பலத்தில் 60 சஸ்டியம்சங்களை அதாவது
ஒரு ரூபம் பெரும் . சஸ்டியம்சம், ரூபம் போன்றவை கிரகத்தின் வலிமையை கணக்கிட
பயன்படும் அலகு ஆகும்.
2.
அனு வக்கிரம் – ஒரு கிரகம் பின்னோக்கி நகர்ந்து
பின்னுள்ள ராசியை அடைவது அனு வக்கிரம் ஆகும் . உதாரணமாக, விருச்சகத்தில் உள்ள சனி
வக்கிரம் பெற்று துலாமிற்கு செல்வது ஆகும். இவ்வாறு அனு வக்கிரம் அடைந்த கிரகம் 30 சஷ்டியம்சங்களை பெரும் .
3.
ஸ்தம்பனம் – ஒரு கிரகம்
பயணிக்காமல் ஒரே இடத்தில் இருக்கும் நிலைக்கு ஸ்தம்பனம் என்று பெயர் . ஸ்தம்பன
நிலையை அடைந்த கிரகம் 15 சஷ்டியம்சங்களை பெரும்
.
4.
மந்த- ஒரு கிரகம்
சாதாரண வேகத்தை விட மெதுவாக நகர்ந்தால் அதற்கு மந்த கதி என்று பெயர் . மந்த கதியை
அடைந்த கிரகம் 15 சஷ்டியம்சங்களை பெரும்
.
5.
மந்த தார – ஒரு கிரகம்
மந்த கதியை விட இன்னும் குறைவான வேகத்தில் பயணிக்கும் நிலைக்கு மந்த தார
எனப்படும். மந்த தார நிலையை அடைந்த கிரகம் 15 சஷ்டியம்சங்களை பெரும்
.
6.
சம கதி- ஒரு கிரகம் ஒரே
சீரான வேகத்தில் பயணிக்கும் நிலைக்கு சமகதி என்று பெயர் . சம கதியல் உள்ள கிரகம் 30 சஷ்டியம்சங்களை பெரும் .
7.
சார கதி – ஒரு கிரகம்
சாதாரண வேகத்தை விட மிக வேகமாக பயணித்தால் அந்த கிரகம் சார கதியல் உள்ளது என
கொள்ளலாம் . சார கதி அடைந்த கிரகம் 45 சஷ்டியம்சங்களை பெரும்
.
8.
அதிசார கதி – ஒரு
கிரகம் சார கதியல் பயணம் செய்து அடுத்த ராசியை அடைந்தால் இதற்கு அதிசாரம் என்று
பெயர் . அதிசார கதியல் உள்ள கிரகம் 30 சஷ்டியம்சங்களை பெரும்
.
இவ்வாறு கிரகங்கள்
பயணிக்கும் வேகதிற்கேற்ப மதிப்பெண்களை கொடுத்துள்ளார் மகரிஷி பராசரர் . இதில்
வக்கிரம் அடைந்த கிரகத்திற்கு அதிக மதிப்பெண்கள் கொடுகப்பட்டுள்ளது
குறிப்பிடதக்கது .
No comments:
Post a Comment