சனி பகவானுடன் ஓர் கலந்துரையாடல்:
பகுதி -6
ஜாதகர் : “அஷ்டமத்து சனி” என்றால் என்ன ?
சனி : கோசாரத்தில் ஒருவருடைய ராசிக்கு எட்டாம் இடத்தில் நான் வரும் காலமே
அஷ்டமத்து சனி எனப்படும் ?
ஜாதகர் : இதனால் என்ன பாதிப்பு ஏற்படும் ?
சனி : ராசிக்கு எட்டாம் இடத்தில் அமரும் நான் எனது முன்றாம் பார்வையாக பத்தாம்
இடத்தை பார்ப்பேன் . எனவே இந்த காலகட்டத்தில் தொழிழில் முனேற்றம் இருகாது . தொழில்
தொடுங்குவதில் சிக்கலும் , தடையும் இருக்கும் . வேலைக்கு செல்பவர்கள் தனது வேலையை
இழக்க நேரிடலாம் . வேலை பளு அதிகமாக இருக்கும் .மேலும் ஏழாம் பார்வையாக இரண்டாம்
இடமான தன , மற்றும் குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பணம் ஈட்டுவதில் சிக்கல் ஏற்படும்
. குடும்பத்தில் சண்டை , சச்சரவு வரலாம் . குடும்பம் அமைவதில் தடை ஏற்படும் .
மேலும் நான் பத்தாம் பார்வையாக ராசிக்கு ஐந்தாம் வீட்டை பார்ப்பேன் . இதனால் குழந்தைகளால்
மன நிம்மதி கெடும் .
ஜாதகர் : அது சரி சனி பகவனே , “ஏழரை சனி” என்றால் என்ன ?
சனி : சுமார் முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒருவரின் ஜன்ம ராசியை கடப்பேன் .
ராசிக்கு பனிரெண்டாம் இடத்தில் இரண்டரை ஆண்டுகளும் , ஜன்ம ராசியல் இரண்டரை
ஆண்டுகளும் , ராசிக்கு இரண்டாம் வீட்டில் இரண்டரை ஆண்டுகளும் நான்
சஞ்சரிக்கும் ஏழரை ஆண்டு காலமே “ ஏழரை சனி
எனப்படும்”
ஜாதகர் : விரைய சனி என்றால் என்ன ?
சனி : ராசிக்கு பனிரெண்டாம் வீட்டில் நான் சஞ்சரிக்கும் இரண்டரை ஆண்டு காலத்தை
விரைய சனி என்பார்கள் . இந்த கால கட்டத்தில் தான் ஒருவர் என்னுடைய பிடியில்
இருப்பதை உணர்வார். விரைய சனி , பெயருக்கு தகுந்தார் போல் நான் கடுமையான விரயத்தை
கொடுப்பேன். வருகின்ற வருமானத்தை விரயமாக்கி ஒருவரை திண்டாட செய்வேன்.
ஜாதகர் : “ஜென்ம சனி” என்றால் என்ன ?
சனி : ஒருவருடைய ஜென்ம ராசியில் நான் சஞ்சரிக்கும் இரண்டரை அண்டு காலத்தை
ஜென்ம சனி என்பார்கள் . இந்த கால கட்டத்தில் ஒருவருக்கு மிகவும் கடுமையான பலன்களை
செய்வேன் . குறிப்பாக நான் ஒருவருடைய ஜென்ம நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் ஒருவருக்கு கடுமையான மன
அழுதத்தை கொடுப்பேன் ..
ஜாதகர் : ஜன்ம சனி என்றால் அனைவரும் அதிர்ந்து போகிறார்களே, அப்படி என்னதான்
செய்வீர்கள் ?
சனி : ஜென்ம ராசியல் அமரும் நான் முன்றாம் இடத்தை பார்த்து ஒருவரின் தைரியத்தை
கெடுப்பேன் . சரியான முடிவு எடுக்க முடியாமல் ஒருவரை திணற செய்வேன் . ஏழாம் வீட்டை
பார்த்து கூட்டு தொழிலை கெடுப்பேன் . களத்திரத்தை கெடுப்பேன் . பத்தாம் வீட்டை
பார்த்து தொழிலை கெடுப்பேன் . பணி இடை நீக்கம் போன்றவற்றை கொடுப்பேன்ஏழை ,
பணக்காரர் என்று பேதம் பார்க்காமல் அவரவரின் கர்ம வினை கேற்ப ஜென்ம சனியில் நான்
தண்டனையை கொடுப்பேன் . ஜன்ம சனியின் போது ஒருவர் வாய்விட்டு அழும்படியாக கடுமையான
துன்பத்தை கொடுப்பேன் . வயதிர்கேற்றவாரு ஒருவருக்கு கடுமையான மன அழுத்தத்தை
கொடுப்பேன் . அதாவது தீராத வியாதி, காதல் தோல்வி ,கணவன் மனைவி பிரச்சினை ,
வேலையின்மை , தொழிழில் நஷ்டம் , வாகன விபத்து , விவாகரத்து , அசுப விரயம் ,
பிள்ளைகளால் மன நிம்மதி இன்மை , நெருங்கிய உறவினர் மரணம் , வருமானமின்மை , அவமானம்
, தீராத கடன் , எதிரியால் பிரச்சினை, வீட்டிற்கும் காவல் நிலையத்திற்கும் அலைதல்,
நீதி மன்றத்தில் அலைதல் , மருத்துவமனையில் அலைதல் ,படிப்பில் தடை , திருமண தடை , கடுமையான
மன அழுத்தம், போன்றவற்றை கொடுப்பேன். ஆகமொத்தம்
இந்த காலகட்டத்தில் ஒருவரை கசக்கி பிழிவேன்.
ஜாதகர் : ஏழரை சனியின் போது வாழ்கைக்கு தேவையான பாடத்தை நீங்கள் கற்று
கொடுகிறீர்கலாமே? இது உண்மையா ?
சனி : உண்மைதான் . ஏழரை சனியின் போது ஒருவருக்கு பணம் என்றால் என்ன என்பதை
புரியவைப்பேன் , உண்மையான நண்பர்கள் யார் என்பதை அறியவைபேன் , பாசமுள்ள உருவுகள்
யார் , பசு தோல் போர்திய புலி யார் என்பதையும் தெரிய வைப்பேன் . சுருக்கமாக
சொன்னால் வாழ்க்கைக்கு தேவையான பாடத்தை கற்றுகொடுக்கும் ஆசானாக இந்த கால
கட்டத்தில் செயல்படுவேன் .
ஜாதகர் : “பாத சனி” என்றால் என்ன ?
சனி : ஒருவரின் ஜென்ம ராசியை கடந்து ராசிக்கு இரண்டாம் இடத்தில் நான்
சஞ்சரிக்கும் இரண்டரை ஆண்டு காலம் பாத சனி எனப்படும் . இந்த கால கட்டத்தில் என்னுடைய தாக்கம் சிறிது
சிறிதாக குறையும்.
கலந்துரையாடல் தொடரும் ....
No comments:
Post a Comment