Saturday 25 May 2019

சனி பகவானுடன் ஓர் கலந்துரையாடல்: பகுதி -4


சனி பகவானுடன் ஓர் கலந்துரையாடல்:
பகுதி -4
ஜாதகர் : சனி பகவானே தாங்கள் எந்த லக்கினத்திற்கு மிகுந்த யோகம் செய்வீர்கள் ?
சனி : துலா, லக்கினத்தவருக்கு நானே பரிபூர்ண யோகாதிபதி . நான் “சுபதுவம்” “சூட்சமவலு” அடையும் பட்சத்தில் என்னுடைய தசையில் மிகுந்த யோகம் செய்வேன். ரிஷப லக்கினத்தவருக்கு பாக்கியாதிபதியும் நானே, பாதகாதிபதியும் நானே . மிதுன, கன்னி லக்கினதவருக்கு திரிகோணாதிபதியாகவும் , ரோகாதிபதி மற்றும் அஷ்டமாதிபதியாகவும் வருவதால் என்னால் முழு யோகத்தை வழங்கிட முடியாது .
ஜாதகர் : தங்களுடைய மகர , கும்ப, லக்கினங்களுக்கு நன்மை செய்ய மாட்டீர்களா?
சனி : நன்மை செய்வேன். இருப்பினும் மகர லக்கினதிற்கு மாரகாதிபதியாக வருவதாலும், கும்ப லக்கினத்திற்கு விரயாதிபதியாக வருவதாலும் என்னால் முழு யோகத்தையும் செய்ய முடியாது.
ஜாதகர் : நீங்கள் ரிசப லக்கினத்திற்கு மறைந்து உச்சம் அடைவதின் சூட்சமம் என்ன ?
சனி : முழு பாவ கிரகமான நான் ஒருவர் ஜாதகத்தில் நேரடியாக வலு பெறாமல் மறைமுகமாக வலுபெற வேண்டும் . மேலும் ரிஷப லக்கினதவருக்கு நான் பாதகாதிபதியாக வருவதால் நான் மறைவது நன்மை தானே .
ஜாதகர் : நீங்கள் கேந்திரத்தில் இருந்தால் நன்மையா ? திரிகோணத்தில் இருந்தால் நன்மையா ?
சனி : நான் மறைந்து சுபத்துவம் அடைந்தால் தான் நன்மை . நான் ஒரு பாவ கிரகமாக இருப்பதால் கேந்திரத்தில் இருக்கலாம் . ஆனால் நான் திரிகோணத்தில் இருக்க கூடாது . நான் ஒரு வேலை திரிகோணாதிபதியாக வந்தால் அந்த திரிகோண ஸ்தானத்திற்கு மறைய வேண்டும் . அப்பொழுது தான் நன்மை செய்வேன் .
ஜாதகர் : நீங்கள் சுபதுவம் அடையாமல் இருந்தால் உங்களின் தசை எவ்வாறு இருக்கும் ?
சனி : நான் சுபத்துவம் இன்றி தசை நடத்தினால் “ஆறாம் அதிபதி” போலவே பலன் செய்வேன் . அதாவது எனது காரகத்துவமான கடன் , நோய், எதிரியை கொடுப்பேன் .
ஜாதகர் : உங்களுடைய எதிரி யார் ?
சனி : என்னுடைய பரம எதிரி சூரியனும் , சந்திரனும் தான் . எனவே கடக லக்கினதவருக்கு நான் அஷ்டமாதிபதியாக வருகிறேன் . சிம்ம லக்கினதவருக்கு ஆறாம் வீட்டு அதிபதியாக வருகிறேன் . இவ்விரு லக்கினகாரர்களுக்கு என்னுடைய தசை வந்தால் நான் அவர்களை வாட்டி, வதக்கி, கசக்கி,பிழிவேன்.
ஜாதகர் : கடக , சிம்ம லக்கினத்தவருக்கு தாங்கள் எந்த பாவகத்தில் இருந்தால் நன்மை செய்வீர்கள் ?
சனி : நான் மூன்று மற்றும் பதினொன்றாம் பாவகத்தில் நட்பு நிலையல் இருந்தால் தீமையை குறைத்து  செய்வேன் .
ஜாதகர் : நீங்கள் மட்டும் அல்ல , பொதுவாக எந்த அவயோக கிரகங்களும் மூன்று மற்றும் பதினொன்றாம் இடங்களில் இருந்தால் நன்மை செய்வார்கள் என்று சொல்கிறார்களே இதன் சூட்சமம் என்ன ?
சனி : ஒரு லக்கினத்தின் மூன்று மற்றும் பதினொன்றாம் இடங்களில் அந்த லக்கினத்தின் யோகர்களின் நட்சத்திரம் அமைந்து இருக்கும். எனவே இலக்கின யோகாதிபதிகளின் சாரத்தில் இருக்கும் இலக்கின அசுபர்கள் தீமை செய்ய முடியாது, அல்லது தீமையை குறைத்து செய்யும். இதற்கு சாரம் கொடுத்த கிரகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
கலந்துரையாடல் தொடரும் ......


No comments:

Post a Comment