Saturday 25 May 2019

சனி பகவானுடன் ஓர் கலந்துரையாடல்: பகுதி -2


சனி பகவானுடன் ஓர் கலந்துரையாடல்:
பகுதி -2
ஜாதகர் : தங்களை அனைவரும் சனீஸ்வரர் என்று அழைக்கிறார்களே. நவக்ரகங்களில் தாங்கள் மட்டும் “ஈஸ்வர” பட்டம் பெற்றுள்ளீர்களா?
சனி : இந்த அகிலத்தில் ஈஸ்வரர் என்பவர் ஒருவர் மட்டுமே . அவரே எங்களை ஆளும் பரமேஸ்வரர் . அப்படியிருக்க நான் எப்படி ஈஸ்வரராக முடியும் . சமஸ்கிரதத்தில் என்னை “சனைச்சர” என்று அழைப்பார்கள். “மெதுவாக நகர்பவர்” என்பது இதன் அர்த்தம் ஆகும் . கால போக்கில் சனைச்சர என்ற சமஸ்கிரத சொல் மருவி தமிழில் “சனிஸ்வரர்” என்று ஆயிற்று.
ஜாதகர் : தங்களின் ஆட்சி , உச்ச , மூலதிரிகோண வீடுகள் யாவை ?
சனி : மகரம் என்னுடைய ஆட்சி வீடு . கும்பம் என்னுடைய மூல திரிகோண வீடு . துலாம் என்னுடைய உச்ச வீடு .
ஜாதகர் : தாங்கள் எங்கு “திக் பலம்” அடைவீர்கள்?
சனி : நான் லக்கினதிற்கு ஏழாம் இடமான மேற்கு திசையில் திக் பலம் பெறுவேன், அதற்கு ஏழாம் இடமான லக்கினத்தில் திக் பலம் இழப்பேன் .
ஜாதகர் : தாங்கள் எந்த ராசியல் நீசம் அடைவீர்கள்?
சனி : நான் உச்சம் அடையும் துலாம் ராசியிலிரிந்து ஏழாம் ராசியான மேஷத்தில் நீசம் அடைவேன்.
ஜாதகர் : தங்கலால் எதாவது யோகம் உண்டா?
சனி : நான் கேந்திரத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் “சச” யோகத்தை கொடுப்பேன்?
ஜாதகர் : ஒருவர் ஜாதகத்தில் தாங்கள் நேரடியாக வலுபெறக்கூடாது என்கிறார்களே , இது உண்மையா?
சனி : நான் நேரடியாக ஆட்சி அல்லது உச்சம் அடைந்தால் ஒருவரை உடல் வருத்தி வேலை செய்ய வைப்பேன் . சொகுசான வாழ்க்கையை என்னால் தர முடியாது .
ஜாதகர் : அப்படி எனில் நீங்கள் எப்பொழுது நன்மை செய்வீர்கள் ?
சனி : நான் “சுபத்துவம்” அடையும்போது மட்டும் நன்மை செய்வேன் ?
ஜாதகர் : “சுபத்துவம்” என்றால் என்ன ?
சனி : நான் ஒரு ஒளி அற்ற கிரகம் . கிரகங்களின் ஒளி திறனுக்கு எற்றவாரு மகாகவி காளிதாசர் கிரக களா பரிமாண எண் கொடுத்துள்ளார் . அதன் படி அவர் எனக்கு கொடுத்த மதிப்பெண் 1 ஆகும் . இதிலிருந்தே நான் ஒரு ஒளி அற்ற கிரகம் என்பது உமக்கு புரிந்து இருக்கும் . ஒளியற்ற கிரகமான நான் ஒளி பொருந்திய சுப கிரகங்களான குரு, சுக்கிரன் , தனித்த புதன் , ஒளி பொருந்திய சந்திரன்  ஆகியோரிடம் ஒளியை கடனாக பெறும் நிகழ்விற்கே “சுபத்துவம்” என்று பெயர் .
ஜாதகர் : அது சரி நீங்கள் எப்படி  சுபத்துவம் அடைவீர்கள் ?
சனி : ஒளி பொருந்திய சுப கிரகங்களின் இணைவை ராசியிலோ அல்லது அம்சத்திலோ  பெறும்போதும் , அவர்களின் பார்வையை பெறும்போதும் , ராசியிலோ அல்லது அம்சத்திலோ அவர்களின் வீட்டில் அமரும்போதும் , அவர்களின் சாரத்தை பெற்று சாரநாதன் நல்ல நிலையல் இருக்கும்போதும், கேதுவுடன் இணையும்போதும் நான் சுபத்துவம் அடைவேன் .
ஜாதகர் : நீங்கள் சந்திரனுடன் இணையும் போது அல்லது அவருடைய பார்வை பெறும்போது  “புணர்பூ” தோஷம் என்கிறார்களே இதனை விளக்க முடியுமா ?
சனி : இதனை நாளை விளக்குகிறேன்.....
கலந்துரையாடல் தொடரும் ......


No comments:

Post a Comment