Saturday 25 May 2019

சனி பகவானுடன் ஓர் கலந்துரையாடல்: பகுதி -5


சனி பகவானுடன் ஓர் கலந்துரையாடல்:
பகுதி -5
ஜாதகர் : சனி பகவனே உங்களுடைய “காரகத்துவங்களை” விளக்க முடியுமா ?
சனி : தாராளமாக விளக்குகிறேன். அதாவது ,
“வியாதி, கடன் , ,மனக்கவலை,தொல்லைகள் ,ஆயுள் , பொய்பேசுதல் ,அழுக்கு மற்றும் கிழிந்த  ஆடை , கருப்பு நிறம் , இரும்பு , உடல் ஊனமுற்றோர், கீழ் நோக்கிய பார்வை ,விவசாயம் ,சாலை நிர்வாகம் ,எலும்புகள், அருவருப்பான முடி, பயம் ,எருமை , திருட்டு, கல்நெஞ்சம். சோம்பல் , தாழ்வு மனப்பான்மை , கருநிற தானியங்கள்”,   முதலியவற்றிற்கு நான் காரகம் வகிப்பவன் .( உத்திர காலமிர்தம் பக்கம் 166)
ஜாதகர் : நீங்கள் தொழில் ஸ்தானதொடு தொடர்பு கொள்ளும்போது எவ்வகையான தொழிலை அமைத்து கொடுப்பீர்கள் ?
சனி : நான் ஒருவருடைய ஜாதகத்தில் நேர்வலு அடைந்து இருந்தால் ஒருவரை மிக நுட்பமான தொழிலை செய்ய வைப்பேன் . ஒருவர் சிறந்த மெகானிக்காக இருக்கிறார் என்றால் கட்டாயமாக அவருடைய ஜாதகத்தில் நான் நேர்வலு பெற்று இருப்பேன் . மேலும் விவசாயத்திற்கு காரகம் வகிப்பவனும் நானே . நான் நேர்வலு அடைந்தால்  கழிவறை சுத்தம் செய்தல், சாக்கடை அள்ளுதல் , குப்பைகள் அள்ளுதல், ஆநாதை விடுதி நடத்துதல் , மூட்டை சுமத்தல் , கல் குவாரியில் வேலை செய்தல், கூலி வேலை செய்தல் . நீச திரவத்தின் (பெட்ரோல், டீசல்)  மூலம் வருமானம் போன்ற தொழிலை அமைத்து கொடுப்பேன் . ஒருவேளை நான் பாபதுவமாக இருந்து தொழில் ஸ்தானதோடு தொடர்பு கொண்டால் மேற்கண்ட தொழிலின் மூலம் தீமையை செய்வேன் . ( ஐயா ஆதித்ய குருஜியின் “ ஜோதிடம் எனும் தேவரகசிம்- பகுதி – 2- பக்கம் -64 )
ஜாதகர் : அது சரி , நீங்கள் சுபதுவமாக தொழில் ஸ்தானதொடு தொடர்பு கொள்ளும்போது எவ்வகையான தொழிலை அமைத்து கொடுப்பீர்கள்?
சனி : நான் சுபதுவமாக இருக்கும்பொழுது என் சுப வலுவிற்கேர்ப ஒருவரை மக்களிடம் தொடர்பு கொள்ளும் பணியை கொடுப்பேன் . அதாவது ஊராட்சி மன்ற  உறுப்பினர், கவுன்சிலர், கிராம நிர்வாக அலுவலர் போன்ற பணியை கொடுப்பேன் . மேலும் நான் குருவுடன் இனைந்து மிகவும் சுபத்துவமாக இருந்து லக்கினத்தின்  இரண்டாம் இடம் என்று சொல்லகூடிய வாக்கு ஸ்தானத்தை தொடர்பு கொள்ளும் போது ஒருவரை பொய் சொல்லி பிழைக்கும் தொழிலை செய்ய வைப்பேன் . அது என்ன தெரியுமா? அது தான் வக்கீல் தொழில் மற்றும் மார்க்கெட்டிங்.
ஜாதகர் : நீங்கள் சுபதுவமாக லக்கினத்தை தொடர்பு கொள்வதற்கும் , பாபதுவமாக லக்கினத்தை தொடர்பு கொள்வதற்கும் , வக்கிரம் பெற்று லக்கினத்தை தொடர்பு கொள்வதற்கும் ஏதேனும் வித்தியாசம் உள்ளதா?
சனி : நிச்சயமாக உள்ளது . நான் ஆன்மீக கிரகமான குரு அல்லது கேதுவின் தொடர்பு பெற்று லக்கினத்தை அல்லது லக்கினாதிபதியை அல்லது  ராசியை தொடர்பு கொள்ளும் போது ஒருவரை சிறந்த சிவ பக்தனாக்குவேன். ஆன்மீகத்தில் மிகுந்த தேடலை கொடுப்பேன் . ஆண்ட சராசரத்தின் சூட்சமத்தை அறிய வைப்பேன் . தன்னை அறியசெய்து சிவ நிலையை அடைய வைப்பேன் .
நான் பாபதுவமாக லக்கினத்தை அல்லது லக்கினாதிபதியை  தொடர்பு கொண்டால் ஒருவரை பிடிவாதகாரராகவும், தாழ்வு மனப்பான்மையோடு இருப்பவராகவும் , சுயநலவாதியாகவும், பிறருடைய துன்பத்தில் இன்பம் காண்பவராகவும் இருக்க செய்வேன்.
நான் வக்கிரம் பெற்று லக்கினத்தை தொடர்பு கொள்ளும்போது ஒருவருக்கு மந்த புத்தியாகவும் , பிறர் சொல்வதை புரிந்து கொள்ள முடியாதவராகவும் , இவர் சொல்வதை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் போகும் . அதாவது கருத்து பரிமாற்றத்தில் ஒரு வகையான தடங்கல் இருக்கும் .

கலந்துரையாடல் தொடரும் ......

No comments:

Post a Comment