Saturday 25 May 2019

சனி பகவானுடன் ஓர் கலந்துரையாடல்: பகுதி -7 (நிறைவு பகுதி )


சனி பகவானுடன் ஓர் கலந்துரையாடல்:
பகுதி -7  (நிறைவு பகுதி )
ஜாதகர் : ஏழரை மற்றும் அஷ்டமத்து சனியில் எந்த ராசிக்கு மிகுந்த சிரமத்தை கொடுப்பீர்கள் ?
சனி : எனது ஜென்ம விரோதிகளான சூரிய , சந்திரரின் ராசியான சிம்மம் , மற்றும் கடகதிற்கும் , மற்றொரு பாவ கிரகமான செவ்வாயின் ராசிகளான மேஷம் , மற்றும் விருச்சிகதிற்கும் மிகுந்த சிரமத்தை கொடுப்பேன்.
ஜாதகர் : மற்ற ராசிகளுக்கு நன்மை செய்வீர்களா ?
சனி : எனது ராசியான மகர , கும்பதிற்கும், எனது நண்பரான புதன் மற்றும் சுக்கிரன் ராசிகலான மிதுனம் , கன்னி , ரிசபம் , துலாதிற்கும் தீமையை குறைத்து செய்வேன் . அதாவது ஒரு தந்தையானவர் தன் பிள்ளைகளின் நலனுக்காக சில நேரங்களில் எவ்வாறு கடிந்து கொள்வாரோ அதை போலவே நானும் செய்வேன் . சுருக்கமாக சொன்னால் விருச்சிக ராசியினைரை நான் இரும்பு பந்தால் அடித்தால் , எனது மற்றும் எனது நண்பர்களின் ராசிகரர்களை பூ பந்தால் அடிப்பேன் . இரும்பு பந்தால் அடி வாங்குவதற்கும் பூ பந்தால் அடி வாங்குவதற்கும் வித்தியாசம் உள்ளது அல்லவா ?
ஜாதகர் : ஆம் புரிகிறது சனி பகவனே . அது சரி  தனசு மற்றும் மீன ராசியினர் பற்றி சொல்லவில்லையே ?
சனி : சொல்கிறேன் . குருபகவான் எனக்கு நட்பும் இல்லை , பகையும் இல்லை . அவர் எனக்கு சமமானவர் . மேலும் நான் தனசு மற்றும் மீன ராசியல் “சுபத்துவம்” அடைவேன் . அதனால் இந்த ராசியினருக்கும் தீமையை குறைத்து செய்வேன் .
ஜாதகர் : ஜென்ம மற்றும் அஷ்டமத்து சனியின்  தாக்கத்தில் உள்ள அனைவரும் சிரமப்படுவதில்லையே? ஏன் இந்த பாகுபாடு?
சனி : ஒருவருடைய ஜாதகத்தில் நான் “சுபத்துவ மற்றும் சூட்சம வலு”  அடைந்து இருந்தாலும் , அல்லது நேர் வலு இழந்து இருந்தாலும், யோக தசை நடை பெற்று இருந்தாலும்  ஜென்ம மற்றும் அஷ்டமத்து சனியின் தாக்கம் குறையும் .
ஜாதகர் : அஷ்டமத்து மற்றும் ஏழரை சனியின் போது எந்த கிரகத்தின் தசை நடை பெற்றால் மிகுந்த துன்பத்தை கொடுப்பீர்கள்?
சனி : இலக்கின அசுபரின் தசை அல்லது புத்தி  நடை பெற்றாலும் , குறிப்பாக அஷ்டமாதிபதி தசை அல்லது புத்தி நடை பெற்றாலோ, எல்லாவற்றிற்கும் மேலாக சந்திர தசை அல்லது புத்தி நடைபெற்றால் மிகுந்த சிரமத்தை கொடுப்பேன் . அதுவும் நீச சந்திரன் என்றால் சொல்லவே தேவை இல்லை, சொல்லில் அடங்காத துயரத்தை கொடுப்பேன் .
ஜாதகர் : தசா, புத்திக்கு அப்பாற்பட்டு ஏழரை மற்றும் அஷ்டமத்து சனியின் போது உங்களின் தாக்கம்  குறைய வழி உள்ளதா?
சனி : நிச்சயம் உள்ளது . கோச்சாரத்தில் நான் சுப கிரகங்களின் தொடர்பை பெற்று நான்  “சுபத்துவம்” அடையும்போதும், கேதுவுடன் இனைந்து “சூட்சம வலு” அடையும்போதும் எனது தாக்கம் குறையும் .
ஜாதகர் : ஒருவர் ஏழரை மற்றும் அஷ்டமத்து சனியில் இருந்து தன்னை  காத்து கொள்ள என்ன செய்ய வேண்டும் ?
சனி :  1. எங்களை  படைத்த ஈசனிடம் முழு சரணாகதி அடைதல் .   
      2.தினமும் கோளறு பதிகத்தை பக்தியோடு பாடுதல் .
      3. எனது குருநாதரான  காலபைரவருக்கு மண் அகலில் நல்லண்ணை தீபம் இடுதல் .
      4. சனிக்கிழமை தோறும் அஞ்சனை மைந்தனான அனுமனை தரிசனம் செய்தல் .
      5. தினம்தோறும் காகத்திற்கு எள் கலந்த சாதம் இடுதல்
     .6.சனிக்கிழமை இரவுதோறும் சிறிது எள்லை ஒரு காகிதத்தில் முடிந்து தலைக்கு அடியில் வைத்து உறங்கி மறுநாள் சாதத்தில் கலந்து காகத்திற்கு இடுதல் ,
7. அன்னதானம் செய்தல்
8.ஆதரவு அற்றவருக்கு உதவி செய்தல்
9. துப்புரவு பணியாளர்களுக்கு உதவி செய்தல்
10 உடல் ஊனமுற்றோர்க்கு உதவி செய்தல்
11 அன்னதானம் செய்ய இயலாதவர்கள் மீன்களுக்கு பொறியை உணவாக அளிக்கலாம் ....
இவ்வாறு செய்வதின் மூலம் ஒருவர் ஏழரை மற்றும் அஷ்டமத்து சனியில் இருந்து தன்னை காத்து கொள்ளலாம் .
ஜாதகர் : நன்றி சனி பகவனே.
சனி : ஆகட்டும் . இதோ குரு பகவான் வந்து கொண்டு இருக்கிறார் ....அவரிடம் உரையாடவில்லையா ?
ஜாதகர் : கட்டாயமாக உரையாட வேண்டும் .

சனி பகவானுடன்  கலந்துரையாடல் நிறைவு பெற்றது.




No comments:

Post a Comment