Saturday 25 May 2019

சனி பகவானுடன் ஓர் கலந்துரையாடல்: பகுதி -3


சனி பகவானுடன் ஓர் கலந்துரையாடல்:
பகுதி -3
ஜாதகர் : நீங்கள் உடல் உழைப்பிற்கு காரகம் வகிப்பிவர் . அப்படியிருக்க உங்களால் ஒரு சொகுசான வாழ்கையை தர முடியுமா ?
சனி : ஒருவருடைய ஜாதகத்தில் நான் சுப கிரகங்களின் தொடர்பு இன்றி நேர் வலு அடைந்து இருந்தால் , ஜாதகரை கடுமையாக உழைக்க வைப்பேன் . நான் சுபத்துவம் அல்லது உச்ச பங்கம் அடைந்து இருந்தால் மட்டுமே நன்மை செய்வேன் .
ஜாதகர் : உச்ச பங்கம் என்றால் என்ன ?
சனி : நான் உச்சம் பெற்று வக்கிரம் அடைந்தால் எனது வலிமையை இழப்பேன் . இதுவே உச்ச பங்கம் எனப்படும் .
ஜாதகர் : எந்த சுப கிரகத்தின் தொடர்பை நீங்கள் பெரும்பொழுது நன்மையை கூடுதலாக செய்வீர்கள் ?
சனி : பொதுவாக சுக்கிரன் , தனித்த புதன் , ஒளி பொருந்திய சந்திரனின் தொடர்பை பெறும்போது நான் “சுபத்துவம்” அடைந்தாலும், வலிமை பெற்ற  குரு பகவானின் தொடர்பை நான் பெறும்போது கூடுதலாக சுபத்துவம் அடைவேன் .
ஜாதகர் : அசுர குருவான சுக்கிரனை காட்டிலும் உமக்கு தேவ குருவான பிரகஸ்பதியை தான் மிகவும்  பிடிக்குமோ?
சனி : சுக்கிரர் எனக்கு நெருங்கிய நண்பர் . தேவகுருவானவர் எனக்கு நட்பும் இல்லை , பகையும் இல்லை எனக்கு சமமனாவர் . அது மட்டும் இல்லமால் எனக்கு மிக  அருகில் இருப்பவர். சுக்கிரரோ எனக்கு மிகவும் தொலைவில் இருப்பவர் . எனவே தேவ குருவின் தொடர்பை நான் பெறும்போது மிகவும் சுபத்துவம் அடைகிறேன்.
ஜாதகர் : அப்படியெனில் முழு பாவ கிரகமான உங்களிடம் இணையும் குரு பகவானின் நிலைமை என்னவாகும்?
சனி : நீ கூறுவது உண்மைதான் . குரு பகவான் தனது பூரண ஒளியால் என்னை சுபத்துவபடுத்துவதால் அவர் தனது ஒளியை இழப்பபார். இதனால் அவரது காரகத்துவம் பாதிக்கப்படும் .
ஜாதகர் : அது சரி . தாங்கள் குரு பகவானுடன் இணைந்தால் “தோஷம்” என்கிறார்களே ? இதனை விளக்க முடியுமா ?
சனி :  தோஷம் என்பது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று  ஆகும். உண்மையில் நான் குரு பகவானிடம் இணையும் தூரம் அதாவது பாகை அளவு பொறுத்தே அவர் தனது வலிமையை இழப்பார். ஒரு வேலை நாங்கள்  இருவரும் மிகவும் நெருங்கி இருந்தால் குரு பகவான் தன்னுடைய காரகத்துவமான குழந்தை பாக்கியத்தை கொடுக்கும் வலிமையை இழப்பார். இதனையே தோஷம் என்கிறார்கள் . உண்மையை சொல்லப்போனால் இந்த நிலையல் ஒருவருக்கு என்னுடைய தசா வரும்பொழுது குருவை போல் நான் பெரும் யோகம் செய்வேன் . குரு பகவானிடம் நான் பரித்த காரகதுவத்தை எனது தசையில் நானே கொடுப்பேன் .
ஜாதகர் : நீங்கள் சந்திரனின் தொடர்பை பெற்றால் “புனர்பூ” தோஷம் என்கிறார்களே . இதனை விளக்க முடியுமா ?
சனி : தோசத்தை மட்டும் பற்றியே பேசுகிறாயே. யோகத்தை பற்றியும் பேசலாமே .
ஜாதகர் : எனக்கு புரியவில்லை ?
சனி : பொதுவாக நான் சந்திரனின் தொடர்பை பெறும்போது நான் சுபத்துவம் அடைந்து சந்திரன் தனது ஓளிதிறனை இழப்பார் . இத்தகைய சூழலில் சந்திரனை யோகதிபதியாக கொண்டவர்கள் எந்த யோகத்தையும் அனுபவிக்க முடியாது . எனவே இவர்களக்கு சந்திரனால் தோஷம் ஏற்படவே இதனை புனர்பூ தோஷம் என்கிறார்கள் . மாறாக சந்திரனின் ஒளியை பெற்ற நான் மிகவும் வலு பெற்று என்னை யோகதிபதியாக கொண்டவர்களுக்கு மிகுந்த நன்மை செய்வேன் . எனவே இவர்களக்கு இது புனர்பூ யோகமாக மாறி அபரிவிதமான நன்மை செய்யும். புனர்பூ தோசத்திற்கும் , புனர்பூ யோகத்திற்கும் வித்தியாசம் புரிகிறதா ?

No comments:

Post a Comment