Saturday 25 May 2019

தோஷங்களை பொடிப்பொடியாக்கும் கிரகஅமைப்பு:


ஜாதகத்தில் உள்ள தோஷங்களை பொடிப்பொடியாக்கும் கிரகஅமைப்பு:  
1.       சுப கிரகங்கலான குரு, சுக்கிரன், புதன், இவர்களில் ஒருவர் திரிகோனத்தில் இருந்தால், இருளை அகற்றும் கதிரவன் போல இச்சுபகிரகங்கள் அனைத்து தோசங்களையும் அகற்றிவிடும் என “பிருகத்பராசரஹோரசாஸ்த்ரம்” குறிப்பிடுகிறது.

2.       திரிசூலத்தை கொண்ட ஈசன் தன்னை சரணாகதி அடைந்தவரின் பாவத்தை எவ்வாறு போக்குகிறாரோ , லக்கினத்தில் வலுவுடன்  அமைய பெற்ற குரு எல்லா தீமைகளை அகற்றுவார் என்று “பிருகத்பராசரஹோரசாஸ்த்ரம்” குறிப்பிடுகிறது.

3.       சுதர்சன சக்கிரம் தாங்கிய மகாவிஷ்ணுவிடம் சரணம் அடைந்த, ஒருவரின் பாவம் எவ்வாறு போக்கப்படுமோ, லக்கினத்தில் உள்ள குருவும் அவ்வாரே எல்லா தோஷங்களை போக்குவார் என்று கல்யானவர்மர்  தனது “சாராவளி” என்னும் நூலில் கூறியுள்ளார்.

4.       ராசியிலும், அம்சத்திலும் , சுப கிரகங்களின் வீட்டில் பாவ கிரகங்கள் இருந்தாலும், சுபர்களின் தொடர்பை பாபர்கள் பெற்றாலும் ,அனைத்து தீமைகளும் பொடிப்பொடியாகிவிடும் என்று கல்யானவர்மர் குறிபிடுகிறார்.


5.       தனது ஒரே அம்பினால் முப்புரத்தை சிவபிரான் எவ்வாறு எரித்து சாம்பலாக்கினாறோ, த்ரிகோனத்தில் அமையபெற்ற லக்னாதிபதி அவ்வாரே எல்லா தீமைகளையும் சாம்பலாக்குவார் என்று “பிருகத்பராசரஹோரசாஸ்த்ரம்” குறிப்பிடுகிறது.

6.       லக்னத்திற்கு 3, 6, 11 ம் வீட்டில் சுபரின் பார்வை பெற்ற ராகு அமையபெருமாயின், காற்றில் அடித்து செல்லும் பஞ்சு போல அணைத்து தீமைகளும் பறந்துவிடும் என்று கல்யானவர்மர் குறிபிடுகிறார்.
7.       பாவ கிரகங்களை சுப கிரகங்கள் சூழ்ந்து இருந்தால் எல்லா தீமைகளும் நசுங்கிவிடும் என்று “பிருகத்பராசரஹோரசாஸ்த்ரம்” குறிப்பிடுகிறது.





No comments:

Post a Comment